13 அக்டோபர் 2009

நிலாச்சோறு!


முழு நிலவில் பால் கறந்து
நிறைபானை பொங்கல் வைத்தோம்
இரவென்றும் பாராமல்
ஊரெல்லாம் பகிர்ந்திட்டோம்
சுற்றமெல்லாம் சேர்ந்திருந்து
முற்றத்திற் கதைபேசி
முழுவதையும் உண்டார்கள்!
காலை விடிகையிலே
பானையதும் காலியாச்சு
மறு இரவும் பொங்கலிட்டோம்
பி()டியரிசி குறையாக‌....
எனினும்
முன்னிரவுபோலே
முறையாகப் பங்கிட்டோம்
தொடர்ந்து வந்த இரவுகளில்
ஒவ்வோர் பி()டியரிசாய்க் குறைத்திட்டோம்

பானையதும் குறையாக
ஊர்வயிறும் அரைவயிறாய்....
ஒரு நாள் மட்டுமிங்கே
பானையிட அரிசில்லை
மாதமொரு நாள்
மக்களெல்லாம் பட்டினியாய்...

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பகிர்தலின் சுகம் உணரப்பட்ட போதும் பற்றாக்குறையை எப்படி சித்தரித்தாய் தணிகாஷ் கவிதையின் தொடக்கதிலிருந்தே..உங்கள் கவிதை நடை மிகவும் அருமை தொடரட்டும்..வாழ்த்துக்கள்

அனுபவம் சொன்னது…

// தமிழரசி கூறியது...

பகிர்தலின் சுகம் உணரப்பட்ட போதும் பற்றாக்குறையை எப்படி சித்தரித்தாய் தணிகாஷ் கவிதையின் தொடக்கதிலிருந்தே..உங்கள் கவிதை நடை மிகவும் அருமை தொடரட்டும்..வாழ்த்துக்கள்//

தமிழரசி கூறியது...

பகிர்தலின் சுகம் உணரப்பட்ட போதும் பற்றாக்குறையை எப்படி சித்தரித்தாய் தணிகாஷ் கவிதையின் தொடக்கதிலிருந்தே..உங்கள் கவிதை நடை மிகவும் அருமை தொடரட்டும்..வாழ்த்துக்கள்

க.பாலாசி சொன்னது…

//ஒரு நாள் மட்டுமிங்கே
பானையிட அரிசில்லை
மாதமொரு நாள்
மக்களெல்லாம் பட்டினியாய்...//

மாதமொருநாள் மட்டுமா.....சந்தோஷம்....

பகிர்ந்துண்டால் பிரிவில்லை.

நல்ல கவிதை....

அனுபவம் சொன்னது…

//க.பாலாசி சொன்னது…

//ஒரு நாள் மட்டுமிங்கே
பானையிட அரிசில்லை
மாதமொரு நாள்
மக்களெல்லாம் பட்டினியாய்...//

மாதமொருநாள் மட்டுமா.....சந்தோஷம்....

பகிர்ந்துண்டால் பிரிவில்லை.

நல்ல கவிதை...//
கருத்துரைக்கு நன்றி தோழர் பாலாஜி அவர்களே!