10 நவம்பர் 2009

உண்மைக்காதல்!


மாடி வீட்டு முற்றத்துல‌
கூடிருந்து ஆடயில சின்னத்தான்- நீ
முத்தமிட்டுச்
சொன்ன கத என்னத்தான் -எனை
முத்தமிட்டுச் சொன்ன கத என்னத்தான்?

போடி போடி புள்ள நீ
போன கத சொல்வதிங்கு ஏனிப்போ? -எப்போ
போன கத சொல்வதிங்கு ஏனிப்போ?

கோடி கோடியாய் உழைத்து
கோடீஷ்வரன் ஆனபின்பு
தேடி என்னை மணம் புரிவேன்
என்று சொன்னியே -இப்போ
போடி போடி என்று நீ விரட்டுறியே?

சின்ன வயசில நான்
சிந்திக்காம சொன்னதெல்லாம்
உண்மையாக உன்மனதில் வச்சிருக்கியா -புள்ள‌
உண்மையாக உன்மனதில் வச்சிருக்கியா?

எதற்காக என்னக் கட்டத் தயங்குறீங்க?
என்ன குறைச்சலென்று சொல்லுவீங்களா?- எனக்கு
என்ன குறைச்சலென்று சொல்லுவீங்களா?

கறையொன்றும் இல்ல கண்ணே உன்னிடத்திலே
குறையெல்லாம் இருக்கிறது என்னிடத்திலே-பெரிய
குறையெல்லாம் இருக்கிறது என்னிடத்திலே

குறையொன்றும் இல்லை அத்தான் உன்னிடத்திலே- பெரிய‌
குறையொன்றும் இல்லை அத்தான் உன்னிடத்திலே‍
பணக்கார பெண்ணென்று விலக்குறீங்க- ‍உங்க‌
குணம் மட்டும் எனக்கென்றும் போதுமையா

உன்னவிட்டு நான் என்றும் பிரியேனடி‍ -உங்க
அப்பனுக்கும்
சதி செய்ய நினையேனடி
வாடி கண்ணே ஆசீர்வாதம் பெற்றுக்குவோம்
வாழ்த்தி அத்தை வரம் கொடுத்தா வாழ்ந்துக்குவோம்!

4 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

தணிகாஷ்,கிராமத்து இசையா இல்லை கும்மியா எனக்குத் தெரியவில்லை.ஆனா நல்லாயிருக்கு.

சத்ரியன் சொன்னது…

//வாடி கண்ணே ஆசீர்வாதம் பெற்றுக்குவோம்
வாழ்த்தி அத்தை வரம் கொடுத்தா வாழ்ந்துக்குவோம்! //

அனுபவம்,

எங்க ஊருல எவன் சாமி ஆசீர்வதிக்கிறான். தெரிஞ்சிட்டாலா வதைக்குறான். பாட்டு நல்லாருக்கு.

அனுபவம் சொன்னது…

// ஹேமா கூறியது...

தணிகாஷ்,கிராமத்து இசையா இல்லை கும்மியா எனக்குத் தெரியவில்லை.ஆனா நல்லாயிருக்கு//
கும்மி இல்லை ஹேமா!கிராமத்து இசையாகவே எடுத்துக்கலாம்.
கருத்துரைக்கு நன்றி ஹேமா!

அனுபவம் சொன்னது…

// சத்ரியன் கூறியது...

//வாடி கண்ணே ஆசீர்வாதம் பெற்றுக்குவோம்
வாழ்த்தி அத்தை வரம் கொடுத்தா வாழ்ந்துக்குவோம்! //

அனுபவம்,

எங்க ஊருல எவன் சாமி ஆசீர்வதிக்கிறான். தெரிஞ்சிட்டாலா வதைக்குறான். பாட்டு நல்லாருக்கு.//

உண்மைதான் சத்திரியன்! இந்தக்காலத்துல எதிர்பார்க்க முடியாததுதான்!
நன்றி நண்பர் சத்திரியன் அவர்களே!