10 மார்ச் 2010

நீ அல்லது தீ

காதலில் மதிமயங்கி
கட்டியே தழுவியுன்னை
சாதலை அணைத்துக்கொள்ளும்
விட்டிலுங்கூட வீழ்ந்துயிர் மாய்தல்
கட்டிலில் தழுவும் ஆசையில்தானே?-உன்னைத்
தொட்டிடத் தாவும் குழந்தையுங்கூட
பட்டபின் நெருப்பைக் கண்டதும் ஓடும்
வெட்டெனப் பாயும் உன் சீற்றமென்ன?

நல்லவர் ’தீ’யர் யாவர்க்குமிங்கே
நீ”தீ”யின் தீர்ப்பு ஒன்றெனச் சொல்லி
வெல்பவர் மனதை வெல்லலாம் எனினும்
ஏற்பில்லை எனக்குத் தீயாரின் தீர்ப்பு!

தீய்க்கென்ன தெரியும் தீய்க்கத்தான் தெரியும்
தீய்ந்தவர் நெஞ்சத்தின் வேதனை புரியுமா?-இல்லை
தன்மேல் சாய்ந்தவர் உள்ளத்தின்
காதல்தான் தெரியுமா?

கருத்துகள் இல்லை: