குயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 மே 2009

பாட்டுக்குயில்!





சுந்தரத் தமிழில் எந்தன்

மந்திரக் கனிமொழியை

வந்தனை செய்தே -கவி

பாடு குயிலே !

...

பத்தரை மாற்றுத்தங்கம்

பவளவாய்ப் பசுங்கிளியை

முத்திரை பதித்த பின்னர் -என்

நித்திரை கலைந்ததடியே

...

சித்திரை கடந்த பின்னர்

வைகாசியில் திருமணம்

வாழத்தெமக்கு கூறுகின்றாய்

வரிக்குயிலே!

...

எத்தனை நீ பாடினாலும்

அத்தைமகள் நித்திரைக்கு

பங்கமேதும் செய்திடாதே

பாட்டுக்குயிலே!

...

நித்தமும் உன் பாட்டொலிக்கு

நிஜவடிவம் தரும் கொலுசை- என்

அத்தை மகள் அணிந்திருக்காள் -சத்தத்தில்

ஓடிடாதே காட்டுக்குயிலே!