மற்றுமொரு சம்பவம் திருக்கோயிலை அடுத்துள்ள காஞ்சிரங்குடாவில் வறட்சி காரணமாக நிலம்வெடித்துள்ள மேட்டு நிலப்பகுதியில் நீர் ஊற்றெடுத்து வெளியேறியமையாகும்.பக்கத்திலுள்ள நிலம் வறட்சியினால் வெடித்துள்ள நிலையில் இது அதிசயம் என்றே மக்களால் கருதப்படுகிறது.
மட்டக்களப்பு கல்லடியில் பிள்ளையார் ஆலய வளாகத்திலுள்ள பெரிய வேப்ப மரத்தின் கிளைகளிலிருந்து தேன் போன்று ஒரு திரவம் வடிந்து கொண்டிருப்பது மற்றுமொரு அதிசயமாகும்.இந்த திரவம் இனிமையாகவும் வேப்பம் பழத்தின் சுவையுடையதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு அதிசயிக்க தக்க நிகழ்வாக கல்லடி பேச்சியம்மன் கோயிலிலுள்ள
தேற்றாமரத்தில் அம்மன் உருவத்தின் படிவினையும் மக்கள் தரிசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதில் பல கடவுள்களின் உருவமும் தெரிவதாகக் கூறும் மக்கள் சிலருக்கு தோன்றவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.
இதற்கு முன்னரான இடுகையில் நிந்தவூரில் வெளிப்பட்ட கடற்கன்னி பற்றியதகவல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
